ஊமச்சிக்குளத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு: 4 பேர் கைது!!
Read Time:1 Minute, 22 Second
மதுரை ஊமச்சிக்குளம் நாராயணபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டை கடந்த 2 நாட்களாக கண்காணித்தனர்.
அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அங்கு பாலியல் தொழில் செய்த மீனா (வயது 40), புரோக்கர்கள் தினேஷ் (38), கார்த்திக் (35), லட்சுமணபிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு அறையில் இருந்து கோவை தர்சினி (38), பெங்களூர் சீதா (35) ஆகியோர் மீட்கப்பட்டனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி தங்களை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட இருவரும் பொறியாளர் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Average Rating