காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!!
திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். அவரது மகள் ஜெசிந்தா (வயது 19). பிளஸ்–2 முடித்து உள்ளார். இவரை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கினார்.
பின்னர் கர்ப்பத்தை கலைத்தால்தான் திருமணம் செய்வேன் என்றதால் கர்ப்பத்தை ஜெசிந்தா கலைத்து உள்ளார். இதனால் மனமுடைந்த ஜெசிந்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு அஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெசிந்தா இறந்தார்.
இதனால் பொது மக்கள் மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். ஜெசிந்தா சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தற்கொலை செய்த ஜெசிந்தா தனது கைப்பட எழுதிய கடிதம் கிடைத்து உள்ளது.
அந்த கடிதத்தில் எனது சாவுக்கு ரெண்டலப்பாறையை சேர்ந்த மதிஸ் என்பவர்தான் காரணம். என்னை சக மாணவர்களுடன் சேர்ந்து கேலி கிண்டல் செய்து பலாத்காரம் செய்தார். அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்தார். எனது சாவுக்கு காரணமாக இருந்த அவருக்கு தக்க தண்டனை தரவேண்டும். இதற்கு முக்கிய காரணம் சாதிப்பிரச்சினையே. இந்த உலகில் சாதிகள் ஒழிய வேண்டும். ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Average Rating