சேலத்தில் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் எங்கே?
Read Time:1 Minute, 0 Second
சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சந்தியா(வயது 17). இவர் இளம் வயது திருமணம் செய்தார். இதையடுத்து இவரை சேலம் இரும்பாலை போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் சிறுமியர் இல்லத்தில் சேர்த்து இருந்தனர். இங்கிருந்து இவர் திடீரென மாயமாகி விட்டார்.
இந்த சம்பவம் பற்றி லைப்லைன் டிரஸ்ட் கண்காணிப்பாளர் கல்பனா சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாவை தேடிவருகிறார்கள்.
இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0427– 2412615 என்ற போனில் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
Average Rating