என்னைப் போல் பிரபல நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்!!
நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஸ்வேதா பாசு பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இதனால் கதாநாயகிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழில், ராரா, சந்தமாமா படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
2002–ல் மக்தே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது அவரது சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. ஸ்வேதா பாசுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை. புதுமுக நடிகைகள் வரத்து அவரை ஓரம் கட்ட வைத்தது. அக்காள், அண்ணி, வேடங்களுக்கு கூட அவரை அழைக்கவில்லை. இதனால் வருமானம் நின்று போனது. அன்றாட செலவுக்கு கஷ்டப்பட்டார். இந்த நிலையில் தான் பாலு என்ற சினிமா உதவி இயக்குனர் ஸ்வேதா பாசுவை விபசாரத்தில் தள்ளினார்.
நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி பெரும் புள்ளிகளிடம் அவரை அனுப்பி வைத்தார். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபர் ஒருவருடன் ஸ்வேதா பாசு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நீதிபதியிடம் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் மறு வாழ்வு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். புரோக்கராக செயல்பட்ட உதவி இயக்குனர் பாலுவும் கைதானார். ஸ்வேதா பாசுவை விபசாரத்தில் ஈடுபடுத்த ரூ.1 லட்சம் பேரம் பேசியதாகவும் அதில் ரூ.15 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி ரூ.85 ஆயிரத்தை நடிகையிடம் கொடுத்து விட்டதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் பண கஷ்டத்தால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் என்னைப் போல் பிரபல நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்கள் யார் என்பது பற்றிய விவரம் தனக்கு தெரியும் என்றும் ஸ்வேதா பாசு பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். இது நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்வேதா பாசு வாக்கு மூலத்தை வைத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள் கண்காணிக்கப்படுகின்றன. புதுமுக நடிகைகளிடம் சினிமா சான்ஸ் வாங்கி தருவதாக ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளும் புரோக்கர்களையும் போலீசார் கண்காணிக்கிறார்கள்.
Average Rating