திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!
Read Time:1 Minute, 2 Second
திண்டுக்கல் காப்பிளியபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் நாகஜோதி(வயது 16). இவர் பெரியக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மகளை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி நாகஜோதி எங்கு சென்றார்? என்ன ஆனார்? காதல் விவகாரத்தில் கடத்தி செல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating