குழந்தைப் பேறுக்காக தோஷம் கழிக்கச் சென்ற பெண்களிடம் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி கைது!!
Read Time:1 Minute, 17 Second
ஹிங்கிரிய – ஹதபான்கொடை பிரதேசத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோஷம் கழிக்கும் தோரணையில் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இரு பெண்களும் நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்துள்ளமையினால் பூசாரியின் உதவியை நாடி உள்ளனர்.
பூசாரி இவர்களுக்கு தோஷம் பிடித்திருப்பதாகவும் அதனை தீர்த்து வைத்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கான தோஷம் கழிக்கும் எற்பாடுகள் செய்யப்பட்ட போது பூசாரியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating