இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து: மூவர் பலி!!
Read Time:59 Second
உத்தரபிரதேசத்தில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
அந்த ஹெலிகொப்டர் பரேலியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து நேரிட்டது.
ஹெலிகொப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாடு இழந்து தடுமாறியதாகவும், பின்னர் தீப்பிடித்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
விபத்து நேரிட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Average Rating