வீட்டு உரிமையாளர் செருப்பால் அடித்ததால் பெண் தற்கொலை: ரெயில்வே ஊழியர் கைது!!
Read Time:1 Minute, 9 Second
அரக்கோணம் டவுன்ஹால் 5–வது தெருவை சேர்ந்தவர் ஜனதாசேகர். ரெயில்வே ஊழியர், இவரது மனைவி ஆதிலட்சுமி நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது வீட்டில் ஜெகநாதன் என்பவர் அவரது மனைவி சுந்தரி(43) மகள் துர்காதேவி ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று குடிநீர் பிடிப்பது சம்பந்தமாக சுந்தரிக்கும் நர்சு ஆதிலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆதிலட்சுமி சுந்தரியை செருப்பால் அடித்தார். அவரது கணவர் ஜனதாசேகரும் சேர்ந்து தாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுந்தரி வீட்டுக்குள் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜனதாசேகரை கைது செய்தனர். நர்சு ஆதிலட்சுமியை தேடி வருகின்றனர்.
Average Rating