விருதுநகரில் வேறு ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில் பெண் கொலை!!

Read Time:2 Minute, 42 Second

8e9f0594-f262-453a-872f-a4f0a8f49832_S_secvpfவிருதுநகர் சாமியார் கிணற்றுத் தெருவை சேர்ந்தவர் லெட்சுமி (வயது34). கணவரை இழந்த இவர் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் 2 குழந்தைகளும் சம்பவத்தன்று வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த லெட்சுமியை யாரோ குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லெட்சுமியின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் ஒரு எண்ணுக்கு அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

அந்த எண் யாருடையது என்று விசாரித்தபோது மதுரை விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து போலீசார் ஈஸ்வரனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இவருக்கும், லெட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுக்குள் தொடர்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈஸ்வரனுடன் உள்ள பழக்கத்தை லெட்சுமி தவிர்த்துள்ளார். மேலும் வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசுவது ஈஸ்வரனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் லெட்சுமியை குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஈஸ்வரன் மதுரையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் பிரேம் என்பவருடன் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். எனவே அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் சதி!!
Next post வீட்டு உரிமையாளர் செருப்பால் அடித்ததால் பெண் தற்கொலை: ரெயில்வே ஊழியர் கைது!!