யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ் மீது தாக்குதல்!!

Read Time:1 Minute, 27 Second

260132340Untitled-1யாழ் – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டி நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த பேருந்தின் மீது யாழ். மீசாலை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பற்றைக்குள் மறைந்திருந்த இனம் தெரியாத நபர்களே பேருந்தின் மீது கற்களை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், பேருந்து தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள முடியாததால் பயணிகள் இறக்கப்பட்டு வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

சேதமடைந்த பேருந்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டு., பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!
Next post குளித்துக் கொண்டிருந்த முதியவர் முதலையிடம் சிக்கி பலி!!