குளித்துக் கொண்டிருந்த முதியவர் முதலையிடம் சிக்கி பலி!!
Read Time:48 Second
கதிர்காமம், காமினிபுர பகுதியில் முதியவர் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
62 வயதான இவர், டோசன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே, முதலையின் பிடியில் சிக்கியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த முதியவர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating