சேலம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 4 Second
சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ளது சின்னதிருப்பதி. இங்குள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சங்கீதா (வயது 20). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சங்கீதா துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்று வலிவரும். இதற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு சங்கீதா வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள். திருமணம் ஆன 4 வருடத்தில் சங்கீதா இறந்து விட்டதால் சேலம் உதவி கலெக்டரும் விசாரித்து வருகிறார்.
Average Rating