போலி நாணயத் தாள்களுடன் ஏறாவூரில் ஒருவர் கைது!!
Read Time:54 Second
போலி நாணயத் தாள்களை வைத்திருந்த ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடையொன்றிக்குச் சென்ற சந்தேகநபர் 1000 ரூபாய் நாணயத்தாளை பயன்படுத்தி பொருட் கொள்வனவில் ஈடுபட முற்பட்டுள்ளார்.
இதன்போது அது போலி நாணயத்தாள் என அடையாளம் கண்டுகொண்ட கடை உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வசமிருந்து, மேலும் இரண்டு போலி நாணயத்தாள்கள் (1000 ரூபாய்) கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் இன்றையதினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating