மாணவிகள் பங்கேற்ற வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!
Read Time:1 Minute, 19 Second
வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து நடைபெற்றது. நாகர்கோவில் இந்து கல்லூரி மாணவ–மாணவிகள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அதிகாரி சுரேஷ்குமார், சமூக நல அலுவலர் (பொறுப்பு) பாண்டியம்மாள், இளஞ்செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ–மாணவிகள் வரதட்சணை ஒழிப்பு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பாக வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் கைகளில் பிடித்தபடி நடந்து சென்றனர்.
செட்டிகுளம் வழியாக சென்ற இந்த பேரணி இந்து கல்லூரியை சென்றடைந்தது.
Average Rating