விமல் – மஹிந்த இடையே வௌ்ளியன்று சந்திப்பு: தினேஸ் – சோபித்த தேரர் பேச்சு!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நாளை வௌ்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி சமர்பித்துள்ள யோசனைகள் சில குறித்து கலந்துரையாடவே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய அரசியல் நிலை மற்றும் எதிர்காலத் தேர்தல்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுசன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவிற்கும் மாதுலுவாவே சோபித்த தேரருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கோட்டே சிறி நாகவிகாரையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதை நிலை குறித்தும் தேர்தல் மற்றும் வாக்களிப்பு முறைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Average Rating