பெண் கொலை: தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரின் 2–வது மனைவி கைது!!

Read Time:6 Minute, 7 Second

e3f5190e-b573-450a-8d55-a3311eaace20_S_secvpfநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி சாமி (வயது34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி அருள்ஜோதி (29). கடந்த ஆண்டு அந்தோணி சாமி, செல்வராணி (26) என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டு தன்னுடன் அழைத்து வந்தார்.

இதற்கு அருள்ஜோதி எதிர்ப்பு தெரிவித்ததால், அதே கருவந்தா ஊரில் மற்றொரு வீட்டை வாடைக்கு எடுத்து அதில் செல்வராணியை குடிவைத்தார்.

அந்தோணிசாமி லாரி டிரைவர் என்பதால், அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். ஊருக்கு வரும் போது 2 மனைவிகளுடனும் மாரி மாரி தங்கி செல்வார்.

இந்த நிலையில் கடந்த 18.9.14 அன்று அருள்ஜோதி வீட்டில் வாயில் நுரை தள்ளியப்படி இறந்து கிடந்தார். அவரது வாயில் விஷ வாடையும் அடித்தது. 2 முழங்கையிலும் சீராய்ப்பு காயங்கள் இருந்தது.

குடும்பத்தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்தபோது, வலிப்பு ஏற்பட்டு கையில் சீராய்ப்பு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரணை நடத்தினார்கள். விஷம் குடித்து தற்கொலை செய்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, அவரது குடல் பகுதியையும் தனியாக வெட்டி எடுத்து எத்தகைய விஷம் என்று ஆய்வு செய்வது வழக்கம்.

அதுபோல அருள் ஜோதியின் குடல் பகுதியையும் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் வெட்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினார்கள்.

சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கையில் தகவல் வெளிவந்தது. அருள்ஜோதி விஷம் குடித்து சாகவில்லை என்றும் அவரது குடல் பகுதியில் எந்தவித விஷமும் இல்லை என்றும் அவரது முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சை நிறுத்தி கொலை செய்துள்ளனர் என்றும் தகவலை டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனால் ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அருள்ஜோதி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது யார், எதற்காக கொலை செய்தார்கள் என்று ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அருள்ஜோதி தற்கொலை செய்ததற்கு முந்தின நாள், அந்தோணிசாமியின் 2–வது மனைவி செல்வராணி தான் வந்து நீண்ட நேரம் இருந்து விட்டு சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் செல்வராணியை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அருள்ஜோதியை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனால் போலீசார் செல்வராணியை இன்று கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதன் விபரம் வருமாறு:–

அந்தோணிசாமியை திருமணம் செய்து கொண்டு இங்கு வந்த பிறகுதான் அவருக்கு முதல் மனைவி இருந்தது தெரியும். மேலும் அந்தோணிசாமி எப்போதும் அருள்ஜோதி வீட்டுக்கு தான் முதலில் செல்வார். அவருக்கு செலவுக்கு அதிக பணம் கொடுத்து விட்டு, எனக்கு மிகவும் குறைவாக பணம் கொடுப்பார். என்னை மனைவி போல் நடத்தாமல் வைப்பாட்டி போலவே நடத்தினார்.

இதனால் எதிர்காலத்தை நினைத்து, பணம் சம்பாதிப்பதற்காக அந்தோணிசாமி ஊரில் இல்லாத போது வேறு 2 ஆண்களிடம் கள்ளத்தொடர்பு கொண்டேன்.

இது அந்தோணிசாமியின் முதல் மனைவி அருள்ஜோதிக்கு தெரிந்து விட்டது. இதனால் அவர் என் வீட்டுக்கு வந்து, எனது கள்ளத்தொடர்பை கணவரிடம் கூறி, என்னை இந்த ஊரை விட்டே வெளியேற்றுவதாக கூறினார்.

இதனால் நான் அருள்ஜோதியின் வீட்டுக்கு சென்று சமாதானம் பேசினேன். ஆனால் அவர் மறுத்து என்னை வெளியே தள்ளி விட்டார். இதனால் நான் அவர் தூங்கும் போது வீட்டுக்கு சென்று, அவரது முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தற்கொலை செய்தது போல் விஷத்தை ஊற்றி விட்டு ஒன்றும் தெரியாதது போல் என் வீட்டுக்கு வந்து விட்டேன்.

இப்போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

செல்வராணி, அருள்ஜோதியை கொலை செய்ய அவரது கள்ளக்காதலன் யாரும் துணை நின்றார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!
Next post பாலக்காடு அருகே மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது!!