மர்ம உறுப்பை ரோட்டில் ஆணி வைத்து அறைந்த ரஷ்ய நபர்: தற்போது காதையும் வெட்டினார் : ரஷ்யாவில் பரபரப்பு..!!
ரஷ்யாவில் அரசாங்கத்தின் அணுகுமுறை சரியில்லை என்றும், பொலிசார் நடவடிக்கை சீர்திருத்தப்படவேண்டும் என்றும் ஒரு நபர் பல காலமாக வித்தியாசமான முறையில் போராடி வருகிறார். இவர் போராட்டம் மிகவும் கோரமாக உள்ளது. ஆனால் உலகின் கவனத்தை ஈர்ந்துள்ளது எனலாம்.
இவர் ஒரு பிரபல்யமான ஓவியரும் ஆவார். சமீபத்தில் அவர் ரஷ்யப் பொலிசாருக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தி, தன்னை இழுத்துச் செல்லாதவாறு , நிலத்தில் வைத்து தனது மர்ம உறுப்பில் ஆணி அறைந்தார். அதற்கு முன்னதாக அவர் தன் உடலை வெட்டிக் காயப்படுத்தி ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் நடு வீதியில் நிர்வாணமாக நின்று, தனது காதை அறுத்துள்ளார். இப்படியும் ஒரு மனிதனால் செய்ய முடியுமா என்று பலர் எண்ணும் அளவு இவரின் கோரமான போராட்டம் தொடர்கிறது. ஆனால் ரஷ்யாவை குறை சொன்னால் பல உலக நாடுகளுக்கு பிடிக்கும் அல்லவா .. அதனால் அவர் செய்யும் ஒவ்வொன்றையும் பெரிதுபடுத்தி முக்கிய செய்தியாக சில மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Average Rating