எல்ஜின் பகுதியிலிருந்து சென்ற பஸ் விபத்து: 15க்கும் மேற்பட்டோர் காயம்!!
Read Time:1 Minute, 2 Second
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பிரதேசத்திலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று மாலை 3 மணியளவில் எல்ஜின் தலவாக்கலை பிரதான வீதியில் அகரகந்தை தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த 15 பேர் படுங்காயமடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating