போராட்டங்களுக்குப் பயந்து மகாபொலவை உயர்த்தவில்லை!!
Read Time:1 Minute, 5 Second
எந்தவொரு போராட்டங்களுக்கோ விமர்சனங்களுக்கோ பயந்து மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே மகாபொல புலமைப் பரிசிலை 4000 ரூபாவாக உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரவு செலவுத்திட்ட யோசனையின் படி 32 ரூபாவாக இருந்த நாட்டரிசி நெல் ஒருகிலோவின் விலையை 34 ரூபாவாகவும், 35 ரூபாவாக இருந்த சம்பா அரிசி நெல் ஒரு கிலோவின் விலையை 40 ரூபாவாகவும் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating