புதுவை பயிற்சி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை!!
நெய்வேலி புதுநகர் 25–வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (வயது18). புதுவையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி ஆசிரியை பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
இவர் தீபாவளி விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். குடும்பத்தினருடன் சேர்ந்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினார். விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், நேற்று இரவு பிரியங்கா தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பிரியங்காவை மீட்டு என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக இறந்து போனார். அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Average Rating