லிந்துலை – வாழைமலை தோட்டத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 26 Second

1978517598thukஅக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹென்போல்ட் பிரிவு வாழைமலை (ஆக்ரா) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.

வாழைமலை தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெயராம் மோகன்ராஜ் என்ற இளைஞரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இளைஞரின் தந்தை கொழும்பில் வேலை செய்வதோடு தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும் நாளை அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் பிரச்சினையே தற்கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணையில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தீர்வு குறித்து சுஷ்மாவுடன் பொன். ராதா பேச்சு!!
Next post வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!!