திருவனந்தபுரம் அருகே ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: காங். பிரமுகர் மகன் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாத்துறை குட்டிச்சல் பகுதியில் அகஸ்தியர் மலை உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆதிவாசி குடியிருப்பை சேர்ந்த பெண்கள் பங்கேற்று விட்டு வாகனம் மூலம் மீண்டும் தங்கள் குடியிருப்புக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒரு ஆதிவாசி பெண்ணிடம் சிலர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக காட்டாத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதி காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மகனான ஆசிக் (வயது 19), அவரது உறவினர் ஜலால் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மற்ற குற்றவாளிகளையும் போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆதிவாசிகள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி நெடுமங்காடு டி.எஸ்.பி. சைபுதின் கூறும்போது, ஆதிவாசி பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த வழக்கில் 7 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விரைவில் மற்றவர்களை கைது செய்வோம் என்றார்.
காங்கிரஸ் பிரமுகர் மகன் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating