மாலக்க சில்வா இன்று அடையாள அணிவகுப்புக்கு!!
Read Time:1 Minute, 15 Second
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இன்று (04) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
கொழும்பு இரவு களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலை அடுத்து மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய ஜோடி ஒன்றுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பிரச்சினை காரணமாக மாலக்க சில்வா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மோதலில் மாலக்க சில்வாவும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் தொடர்பில் மேலும் ஆறு பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று மாலக்க சில்வாவிடம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Average Rating