கள்ளத்தொடர்பு விவகாரம்: தாயை தாக்கியதை தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து!!

Read Time:1 Minute, 34 Second

e3450947-46db-41e9-9a30-ab6aa3ca4c3b_S_secvpfகோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆராத்தாள்(வயது 35).

இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் விதவைப்பெண் சிவகாமி(30)க்கும், செல்வராஜூக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை ஆராத்தாள் கண்டித்தார்.

இந்த நிலையில் சிவகாமியும், அவரது அண்ணன் செந்தில்குமாரும் ஆராத்தாள் வீட்டுக்குச் சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கினர். இதைப்பார்த்த ஆராத்தாளின் மகன் ராஜேஷ் குமார்(14) தட்டிக்கேட்டார். இதில் செந்தில்குமார் ஆத்திரமடைந்து ராஜேஷ்குமாரை கத்தியால் குத்தினார்.

செந்தில்குமாரும், சிவகாமியும் தாக்கியதில் தாயும், மகனும் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு செக்ஸியான உடையில் சமந்தா!!
Next post சவுதியில் இனி பெண்கள் கார் ஓட்டலாம்! ஆனால்…?