விடுதி அறைக்குள் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!
Read Time:1 Minute, 12 Second
சிலாபம் நகரில் விடுதி அறையில் இருந்து இன்று (18) காலை உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு – கொழும்பு வீதியைச் சேர்ந்த 28 வயதான அமில சிந்தக்க என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று குறித்த இளைஞன் முச்சக்கர வண்டியில் வந்து விடுதியில் அறையெடுத்து தங்கியதாக விடுதி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அறையை சுத்தப்படுத்த ஊழியர்கள் முயற்சித்த போது அறைக்குள் இருந்த இளைஞனிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. பின்னர் அறை கதவை திறந்து உள்ளே பார்த்தபோது இளைஞன் சடலமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்து சிலாபம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating