காலத்திற்கும் அதிக கெடு கொடுக்க முடியாது!!

Read Time:1 Minute, 25 Second

419873313Untitled-1அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அரசில் இருந்து விலகுவதாயின் இன்று இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் “எந்தவொரு கேள்விக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் எனினும் காலத்திற்கும் அதிக இடம் கொடுக்கவும் முடியாது” எனவும் கூறினார்.

எதிர்கட்சி அழைத்ததா என்ற கேள்விக்கு உரிய பதிலளிக்காது சிரிப்புடன் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதவிய அனைவருக்கும் நன்றி: என் சேவை நாட்டுக்காக தொடரும்!!
Next post (PHOTOS) இலங்கை அழகி அனார்கலி அமெரிக்காவில் இரகசிய திருமணம் முடித்தார்!!