ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு! திகாம்பரம் முடிவு!!
Read Time:1 Minute, 12 Second
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
வெற்றி பெறுபவர்களுக்குதான் வாக்களிக்க வேண்டும். தோல்வியடைபவர்களுக்கு வாக்களித்து விட்டு மீண்டும் வெற்றி பெற்றவர்களிடம் மண்டியிட முடியாது.
அதனால் வெற்றி பெறுபவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார்.
மீண்டும் அவரே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகுவார், என்று திகாம்பரம் தெரிவித்தார்.
Average Rating