பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணைவு!!
Read Time:1 Minute, 0 Second
தலாவ மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
நேற்று (28) இரவு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் இல்லத்தில் வைத்து இவர்கள் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தலாவ பிரதேசபை எதிர்க்கட்சித் தலைவர் சரத் திஸாநாயக்க மற்றும் மிஹிந்தலை பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் லலித் எதிரிசிங்க ஆகியோரே இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating