பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்தது தவறு இல்லை: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.!!

Read Time:2 Minute, 6 Second

4d190eed-5f15-467e-9816-110dc9280dd1_S_secvpfகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

நேற்று மாலை சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ பிரபு சவான் செல்போனில் படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பு செய்தது. அப்போது அவர், பிரியங்கா காந்தி படத்தை பெரிதுபடுத்தி பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

பா.ஜனதா எம்.எல்.ஏ ஒருவர், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் படத்தை சட்டசபை கூட்டத்தின் போது செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

பா.ஜனதாவினரிடம் அவர்களது கட்சி எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரபு சவான் எம்.எல்.ஏ மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து பிரபு சவான் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியாதாவது:–

சட்டசபை கூட்டம் நடந்த போது எனது செல்போனில் பிரியங்கா காந்தியின் படத்தை பார்த்ததில் எந்த தவறும் இல்லை. தவறான நோக்கத்தில் அவரது புகைப்படத்தை பார்க்கவில்லை.

செல்போனில் பல்வேறு புகைப்படங்களை பார்க்கும் போது, பிரியங்கா படத்தையும் பார்த்தேன். சட்டசபை நடந்த போது புகைப்படங்களை பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீநகரில் சட்டக் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு!!
Next post ஒட்டன்சத்திரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொன்ற மனைவி–மாமனார்!!