கபிஸ்தலம் அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மாமனார்–மைத்துனர் கைது!!
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (42) லாரி டிரைவர்.
இவரது மனைவி உஷா. கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் உஷா கோபித்து கொண்டு தனது மகள்களுடன் துரும்பூர் வடக்கு தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
கோவையில் லாரி ஓட்டி வந்த ஞானசேரகன் சமீபத்தில் ஊர் திரும்பினார். அவர் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
அப்போது மாமனார் ராஜேந்திரனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், அவரது மகன் கலையரசன் ஆகியோர் அரிவாளால் ஞானசேகரனை வெட்டினார்கள். இதில் காயம் அடைந்த அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன், அவரது மகன் கலையரசன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
Average Rating