உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பெண் கவுரவக் கொலை!!
Read Time:1 Minute, 16 Second
உத்தரபிரதேச மாநிலம் பரோடா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேறு இனத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். இதை அறிந்த பெண்ணின் தந்தையும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று அப்பெண்ணுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தையும், குடும்பத்தினரும் அவரை கொலை செய்து புதைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக ஹசன் மற்றும் சத்தார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிணம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Average Rating