கயத்தாறு அருகே இன்று கணவனின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!

Read Time:1 Minute, 54 Second

78456ac1-54a3-4907-91c8-8628e1d2ea91_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது43). இவரது மனைவி முத்துலட்சுமி ( 37). இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக கணவன்–மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழனிச்சாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் இன்று கயத்தாறில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதுபற்றி அறிந்த பழனிச்சாமியின் முதல் மனைவி முத்துலட்சுமி நேற்றிரவு பழனிச்சாமி வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு தரையில் அமர்ந்து கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்தி என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் பழனிச்சாமி ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் 2–வது திருமணத்தை மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்!
Next post சேடப்பட்டி அருகே தாயை அடித்துக்கொன்ற மகன் கைது!