போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!
கேரளா மாநிலம் சித்தூர் தாலுகா கோழிப்பாடத்தை சேர்ந்தவர் ராஜீத். இவர் ஏ.ஆர். போலீஸ் கேம்பில் போலீசாக உள்ளார். இவரது மனைவி வித்யா (வயது 23). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வித்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரது மகன் அழத்தொடங்கினான்.
குழந்தையின் அழகுரல் கேட்டதும் அக்கம் பக்கதினர் ஓடிவந்து பார்த்தபோது வித்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வித்யாவின் உடலை மீட்டனர். போலீசார் சோதனை உடலை செய்தபோது வித்யாவின் வலது கையில் ரத்தக்குழாய் அறுக்கப்பட்டு இருந்தது.
ரத்தக்குழாயை அறுத்த வித்யா அதில் சாகமுடியாததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வித்யா எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating