ஏத்தாப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை!!
ஆத்தூரை அடுத்த ஏத்தாப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் நிஷாந் என்ற மகன் உள்ளான். இவன் பள்ளியில் படித்து வருகிறான்.
இவர்கள் ஏத்தாப்பூர் அரசு பள்ளி பின்புறம் வசித்து வருகிறார்கள். முத்துக்குமார் பள்ளிபாளையத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கணவன்–மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று கணவர் முத்துக்குமார் வெளியே சென்று விட்டார். அப்போது தனது மகன் நிஷாந்தை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.