திருமண வீட்டில் மணமகனின் சகோதரர் அடித்துக்கொலை: வாலிபர் கைது!!
ராஜஸ்தான் மாநிலம் கிஷோர்புரா பகுதியில் ஒரு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த உறவினர்களுக்கு காலை உணவாக பூரி பரிமாறப்பட்டது.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பூரி கிடைக்கவில்லை. இதையடுத்து உறவினர் ஒருவர் சமையல் அறைக்கு சென்று தகராறு செய்தார். அங்கு மணமகனின் அண்ணன் சுபாஷ் சந்திர ஜெயின் என்பவர் சமையல் பணியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
அவரை அந்த வாலிபர் அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த அவர் ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதற்கிடையே திருமணம் முடிந்த பின்பு சுபாஷ் சந்திர ஜெயினை காணாமல் தேடினார்கள். போலீசில் புகார் செய்யப்படடது.
போலீசார் வந்து தேடியபோது அவர் பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கிடையே சுபாஷ் சந்திர ஜெயினிடம் பூரிக்காக உமர் கோஷ் என்ற வாலிபர் சண்டை போட்டது தெரிய வந்தது. அவர்தான் சுபாஷ் சந்திர ஜெயினை தூக்கி சென்று இருக்கிறார். இதையடுத்து உமல் கோஷ் கைது செய்யப்பட்டார்.
Average Rating