விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போது முகம் சிவந்த மேற்கு வங்க போலீஸ்: உல்லாசத்தில் ஈடுபட்ட ஜார்கண்ட் போலீஸ்!!

Read Time:2 Minute, 1 Second

fd06e387-5654-45e3-a375-dca8b41d6950_S_secvpfமேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அருகே உள்ள அசான்சோலில் விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போலீசார், அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 போலீசார் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்து முகம் சிவந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடர்மா சிறைச்சாலை போலீசார் நால்வரும், கொலை குற்றவாளி ஒருவரை மருத்துவமனைக்கு செக்-அப்பிற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களுக்குள் விபரீத சிந்தனை ஒன்று தோன்றியது. அதன் விளைவாக கொலை குற்றவாளியை அழைத்துக்கொண்டு அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திற்கு சென்றனர்.

கோடர்மாவிலிருந்து 206 கி.மீ. தூரத்தில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் அசான்சோல் விபச்சார விடுதிக்கு சென்றனர். அங்கு போலீசார் நால்வரும் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அசான்சோல் போலீசார் அந்த விபச்சார விடுதியை கூற்றிவளைத்தனர். அங்கு உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்த 4 போலீசாரையும் கைது செய்தனர்.

கொலை குற்றவாளி மட்டும் தப்பித்து சென்று, கோடர்மா சிறைக்கு புத்திசாலித்தனமாக சென்று விட்டான். இது குறித்த தகவல் கிடைத்ததும், விசாரணைக்கு உத்தரவிட்ட ஜார்கண்ட் டி.ஜி.பி. டி.கே. பாண்டே 4 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்!!
Next post சட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்!!