ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!!

Read Time:1 Minute, 21 Second

d6dabba6-8b95-4803-9449-0e4ee0a33659_S_secvpfசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சிராலா என்ற இடம் அருகே ரெயில் சென்றபோது, படுக்கை வசதி கொண்ட பெட்டியில் இருந்த ஒரு கொள்ளையன் திடீரென அபாய சங்கிலியை பிடித்து நடுவழியில் ரெயிலை நிறுத்தினான். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் ஜன்னல் வழியாக 4 பயணிகளின் நகைகளை நைசாக பறித்துச்சென்று விட்டனர். திருடு போன நகைகள் மொத்தம் 70 கிராம் எடை கொண்டவை.

பயணிகள் கண் விழித்து பார்த்தபோது நகைகள் மாயமானது தெரியவந்தது. ரெயில் செகந்திராபாத் சென்ற பின்னர் ரெயில்வே போலீசில் பயணிகள் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண மோசடி விவகாரத்தில் சிக்கிய நடிகை..!!
Next post கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது!!