நாடியாவில் 71 வயது கன்னியாஸ்திரி சம்பவத்தை தொடர்ந்து நேற்று 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாடியா மாவட்டத்தில் உள்ள குருலியா என்ற கிராமத்தில் 18 வயதான கொடூரன் ஒருவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தனக்கு நடந்த கொடூரத்தை தனது அம்மாவிடம் அந்த சிறுமி திணறித் திணறி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், கலிகஞ்ஜ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, நேற்று மாலையே அந்த வாலிபனைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக நாடியா மாவட்டத்தில் சராசரியாக ஒரு மாதத்தில் 17 பேர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சமிமா சபிக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating