கடன் தொல்லையால் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 16 Second
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மனம் உடைந்த தம்பதியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வெகு நேரமாகியும் ராமகிருஷ்ணன்(40), அவரது மனைவி நிஷா(35) ஆகியோர் வெளியே வராததை கண்ட அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள், ராமகிருஷ்ணன் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, இருவரும் தூக்குக் கயிற்றில் பிணமாக தொங்கினர்.
உள்ளூர் வங்கி ஒன்றில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்ட இந்த தம்பதியர் கடன் தொல்லையால் இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
Average Rating