பிரபல தயாரிப்பாளரின் சொத்துக்கள் முடக்கம்!!
பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கமல் நடித்த தசாவதாரம், விக்ரமின் அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார்.
படங்களை தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார்.
ரூ.84 கோடிவரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தொகை வட்டியையும் சேர்த்து ரூ.97 கோடியாக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணத்தை திருப்பி செலுத்தாததால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கி இந்தியன் ஓவர்சீஸ் பாங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் வீடுகள், தியேட்டர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கு 121 சதுர அடி சொத்துக்களை இந்தியன் ஓவர்சீஸ் பாங்கி முடக்கியுள்ளது.
இது குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் கூறும்போது பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டு அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும் என்றனர்.
Average Rating