குலசேகரம் அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு!!

Read Time:3 Minute, 15 Second

7fb33c39-9e07-411a-a7a2-4c487e8b87aa_S_secvpfகுலசேகரம் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.

சுஜியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று அவர்கள் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர். தனியாக இருந்த சுஜி அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது சுஜியின் உறவினரான கீரிப்பாறை அருகே உள்ள வெள்ளாம்பி விளையைச் சேர்ந்த ராஜேஷ் (16) மோட்டார்சைக்கிளில் வந்தார். அவர் மாணவியிடம் உனது பாட்டி வீட்டில் இறக்கி விடுகிறேன் என்னுடன் வா என்று அழைத்துச் சென்றார். உறவினர் என்பதால் மாணவியும் அவரது மோட்டார்சைக்கிளில் ஏறினார்.

ஆனால் ராஜேஷ் பாட்டி வீட்டுக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு மாணவியை கடத்திச் சென்றார். அதிர்ச்சி அடைந்த மாணவி தன்னை பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறி அழுதார். ஆனால் ராஜேஷ் மாணவியை அங்குள்ள ஒரு அறையில் சிறைவைத்து கற்பழித்தார். மாணவி எவ்வளவோ போராடியும் ராஜேஷ் அவரை விடவில்லை. கற்பிழந்த மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.

உடனே ராஜேஷ் தனது நண்பர்கள் பிரகதீஷ் (15), பாலாஜி (16) ஆகியோரை அங்கு அழைத்தார். அவர்களிடம் மாணவியை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விடும்படி கூறி விட்டு தலைமறைவானார். பிரகதீசும், பாலாஜியும் மாணவியிடம் இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என கூறி விட்டு மிரட்டினர். பின்னர் அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவர்களும் தப்பிச் சென்றனர்.

வேலைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பினர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி மாணவி அழுதார். இதையடுத்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி மாணவியை கற்பழித்ததாக ராஜேஷ் மீதும், அவருக்கு உதவியதாக பிரகதீஷ், பாலாஜி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் 3 பேரும் 10–ம் வகுப்பு மாணவர்கள் ஆவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயசித்ரா வீட்டில் கொள்ளை!!
Next post அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்.. ஓம் சீமான்! ஜெய் சீமான்! -வில்லவன் (சிறப்பு கட்டுரை)!!