மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது!!
Read Time:1 Minute, 14 Second
மகாராஷ்டிர மாநிலத்தில் மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இராணுவ கர்னல் கைது செய்யப்பட்டார்.
நாசிக்கில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் இராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிபவர் 54 வயதான வினோத் சஹானி. இவர் தங்கியுள்ள தியோலாலி கேம்புக்கு அருகே உள்ள 21 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, தனது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து வினோத் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இன்று நாசிக் ரோட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத்தை 5-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating