துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!
உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் ரஜனீஷ்(22). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இம்ரானாவும்(18) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இம்ரானாவின் காதல் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. உடனே ரஜனீஷ் அவரது குடும்பத்தாரிடம் பேசி அவரை மணமுடிக்க நினைத்தார்.
ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்துவான ரஜனீஷை, இம்ரானாவின் குடும்பம் ஏற்க மறுத்தது. இந்நிலையில் ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் துப்பட்டாவின் மூலம் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு வந்த ஊர்மக்கள் இருவரும் துப்பட்டாவின் இரண்டு முனைகளைக் கொண்டு தூக்கு மாட்டியிருப்பதிக் கண்டு கண்ணீர் சிந்தினர். சற்று தூரம் தள்ளி இருவரது கால் செருப்பும் அருகருகே கிடந்தது.
”எங்களைப் பொறுத்த வரை இது தற்கொலை. காவல் துறை இது பற்றி விசாரித்து வருகிறது” என்கிறார் இம்ரானாவின் தாயார்.
Average Rating