விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கற்பழிப்பு: பள்ளி சிறுவர்கள் மீது வழக்கு!!
பெங்களூர் புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது பள்ளி சிறுவர்கள் சிலர் சிறுமியை நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதற்கிடையே தன்னுடன் விளையாடிய சிறுமி திடீரென்று காணாமல் போனதால் அவளது சகோதரன் அந்தப்பகுதியில் தேடினான். அப்போது பள்ளிச் சிறுவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து ஓடிச் சென்று தனது தாத்தா பாட்டியிடம் தெரிவித்தான்.
உடனே அவர்கள் வந்து சிறுமியை மீட்டனர். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது உறுதியானது.
பெங்களூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரும் சிறுவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் ஒருவன் சிக்கினான். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating