சமயபுரம் கோவிலில் ரூ. 70 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்!!
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டன. கோவில் இணை ஆணையர் தென்னரசு, அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் சுரேஷ், சமயபுரம் கோவில் முதுநிலை கணக்கு அதிகாரி மாலதி, மேலாளர் மணிவண்ணன், அறநிலையத்துறையின் மண்ணச்சநல்லூர் பகுதி ஆய்வாளர் சேதுராமன் ஆகியோரது முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
திருக்கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், மண்ணச்சநல்லூர் தனியார் கம்ப்யூட்டர் மைய மாணவிகள் உண்டியல் பணத்தை எண்ணினர். உண்டியலில் ரூ. 70 லட்சத்து 21 ஆயிரத்து 319 பணம், 2 கிலோ 952 கிராம் தங்க நகைகள், 7 கிலோ 600 கிராம் வெள்ளி நகைகள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட அயல்நாடுகளின் கரன்சிகள், டாலர்கள் 83 ஆகியவை இருந்தன. இவையனைத்தும் கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.
Average Rating