நீலாங்கரை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை: 3 பேர் கும்பல் துணிகரம்!!

Read Time:2 Minute, 57 Second

2bad4106-c844-42fd-9bc4-093a15cbc355_S_secvpfநீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலையில் 2–வது மெயின் ரோடு வி.ஜி.பி.லே அவுட்டை சேர்ந்தவர் தமிழரசி (40). இவர் மட்டும் தனியாக வசிக்கிறார்.

நேற்று இரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அனைவரும் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து டிப்–டாப் ஆக இருந்தனர். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் வேலைக்கார பெண் மட்டும் இருந்தார்.

கையில் தாம்பூலத்தட்டுடன் இருந்த அவர்கள் தமிழரசியை கூப்பிடுங்கள். மைலாப்பூரில் உள்ள அவரது சம்பந்தியின் உறவினர்கள். திருமண பத்திரிகை வழங்க வேண்டும் என்றனர். சரியான விவரங்கள் கூறியதால் மாடியில் இருந்து தமிழரசியை வேலைக்கார பெண் அழைத்து வந்தார்.

அவரிடம் மர்ம நபர்கள் திருமண பத்திரிகை கொடுத்தனர். அது கிறிஸ்தவர் திருமண பத்திரிகையாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தமிழரசி நீங்கள் யார்? வெளியே செல்லுங்கள் என அதட்டலாக கூறினார்.

உடனே, எதிர்பாராத நிலையில் ஒருவன் தமிழரசியின் கழுத்தில் கத்தியை வைத்தான். அணிந்திருக்கும் நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினான். அதற்கு தமிழரசி மறுத்தார். எனவே, கழுத்தில் அவர் அணிந்திருந்த நகைகளை பிடித்து இழுத்து அறுக்க முயன்றனர்.

ஆனால் தமிழரசி அதை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு போராடினார். இதற்கிடையே, வேலைக்கார பெண் தெருவுக்கு வந்து ‘திருடன்… திருடன்…’ என கூச்சல் போட்டார். அதற்குள் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் தமிழரசி கழுத்தில் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையே கொள்ளையர்களுடன் நகையை விடாமல் பிடித்து கொண்டே போராடிய தமிழரசிக்கு கையில் ரத்தகாயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இது குறித்து நீலாங்கரை போலீசில் தமிழரசி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது!!
Next post திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் கல்லூரி மாணவி பிணம்: போலீசில் தாய் புகார்!!