கணவர் மீதான ஆத்திரத்தில் குழந்தையை கொன்று விட்டேன்: 8 மாத மகனை கொன்ற கொடூர தாய் வாக்குமூலம்!!

Read Time:5 Minute, 35 Second

6d9aa59d-6212-4a6b-9477-d81102432acb_S_secvpfபிறந்த குழந்தையின் அழுகையை பார்த்து சிரிக்கும் தாய்மார்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்றிருக்கிறார் ஒரு கொடூர தாய்.

கல் மனம் படைத்த அந்த பெண்ணின் பெயர் கரிஷ்மா. திருப்பதி வித்யா நகர் காலனியை சேர்ந்த மோகன குமார் என்பவரின் மனைவிதான் இந்த கரிஷ்மா. துணிக்கடை ஊழியராக மோகனகுமார் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி, தாய் மாதவியுடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. செல்லமாக குழந்தையை வளர்த்து வந்தனர். அழகான இந்த குடும்பத்தின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. மோகன குமாருக்கும் கரிஷ்மாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இப்படி தகராறு ஏற்படும் போதெல்லாம் தனது கணவர் மீது கடும் ஆத்திரம் அடைவார் கரிஷ்மா. இந்த ஆத்திர குணம் ஒரு கட்டத்தில் தனது செல்ல மகனை கொன்றுவிடும் என்று அப்போது கரிஷ்மா நினைத்திருக்கமாட்டார். ஆனால் அதுவும் நடந்து விட்டது.

நேற்று மாலை கரிஷ்மாவுக்கும் மோகனகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அங்கிருந்து புறப்பட்ட மோகனகுமார் வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த மோகனகுமாரின் தாய் மாதவியும் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் குழந்தையுடன் கரிஷ்மா மட்டும் இருந்தார்.

அப்போது குழந்தை அழுதது. தட்டிக்கொடுத்த கரிஷ்மா குழந்தையின் அழுகையை நிறுத்த அரவணைத்து பார்த்தார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. ஏற்கனவே கணவரிடம் சண்டையிட்ட ஆத்திரத்தில் இருந்த கரிஷ்மாவுக்கு குழந்தை அழுது அடம் பிடித்தது மேலும் எரிச்சலடைய செய்தது.

அங்கு கிடந்த பிரம்பை எடுத்து குழந்தையை அடித்தார். அப்போதும் குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. கோபத்தின் உச்சிக்கே சென்ற கரிஷ்மா பெற்ற மகன் என்றும் பாராமல் குழந்தையை தூக்கி தரையில் அடித்தார். சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டோமே என்று நினைத்த கரிஷ்மா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டால் என்ன சொல்வது என பயத்துடன் நின்றிருந்தார்.

அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த மோகன குமாரின் தாய் மாதவி அங்கு வந்தார். தனது பேரன் பிணமாக கிடப்பதை பார்த்த அவர் பதறினார். பேரனுக்கு என்ன நடந்தது? என்று கரிஷ்மாவிடம் கேட்டார்.

குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறந்து விட்டது என்று பொய் சொல்லி கதறி அழுதார் கரிஷ்மா. ஆனால் தொடர்ச்சியாக மாதவி கேட்ட கேள்விகளுக்கு கரிஷ்மா சரியான பதில் அளிக்கவில்லை.

குழந்தை இறந்த தகவல் தெரிந்ததும் அக்கம் பக்கத்தினரும் அங்கு கூடினர். அவர்களும் கரிஷ்மாவிடம் குழந்தை இறந்தது குறித்து கேட்டனர். ஆனால் அப்போதும் குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறந்ததாக நாடகம் ஆடினார் கரிஷ்மா. இதனால் அவர்களுக்கு கரிஷ்மா மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனவே இது தொடர்பாக திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வந்து கரிஷ்மாவிடம் விசாரித்தனர். அப்போது கரிஷ்மா போலீசாரிடம் முன்னுக்கு முரணாக பதில்களை அளித்தார்.

போலீசார் தொடர்ந்து சரமாரியாக கேள்வி கேட்க அதற்கு பதில் அளிக்க முடியாமல் கரிஷ்மா குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். கணவரிடம் சண்டையிட்ட கோபத்தில் இருந்த நான் ஆத்திரத்தில் குழந்தையை கொன்று விட்டேன் என்று கண்ணீருடன் வாக்குமூலம் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கரிஷ்மாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்மரக்கட்டை கடத்தலை தடுத்த சோதனை சாவடி ஊழியர் லாரி ஏற்றிக் கொலை!!
Next post திருப்பதி அருகே ஓயாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!!