சினிமா கம்பெனியில் வேலை செய்வதாக கூறி அமெரிக்கா சென்ற இந்தியர் மீது விசா மோசடி வழக்கு!!
பாலிவுட் சினிமா நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுக்பால் வீர் சிங் சம்பவத்தன்று குவைத்தில் இருந்து கென்னடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவர் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வழங்கிய விசா மூலம் வந்திருந்தார். ஆனால், விண்ணப்பத்தில் முறைகேடு செய்ததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவர் தனது விண்ணப்ப படிவத்தில் செவன் ஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது, அவர் வேலை எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார். இதையடுத்து விசா மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது நேற்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Average Rating