பட்டப்பகலில் வியாபாரி படுகொலை: தலையை துண்டித்து காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு!!
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பட்டப்பகலில் காய்கறி வியாபாரி ஒருவரை படுகொலை செய்த ஆசாமி, துண்டிக்கப்பட்ட தலையுடன் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் கேந்திரபாராவில் இன்று பிற்பகல் புத்தேஸ்வர் பால் என்பவருக்கும், 30 வயதான காய்கறி வியாபாரி ஒருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பால், பொதுமக்கள் முன்னிலையில் அந்த வியாபாரியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
அப்போதும் ஆத்திரம் தீராத பால், துண்டிக்கப்பட்ட தலையுடன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வியாபாரியின் தலையில்லா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Average Rating