78 வயதில் மலர்ந்த காதல்: 58 வயது பெண்ணை மணந்த முதியவர் – திருமணத்தை முன்னின்று நடத்திய குடும்பத்தினர்!!

Read Time:2 Minute, 1 Second

99e71950-b95f-4252-a12e-05a2615ac7a1_S_secvpfகாதலுக்கு வயது தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 78 வயது முதியவருக்கும், 58 வயது பெண்மணிக்கும் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள மதஹபூர்வா கிராமத்தை சேர்ந்தவர்களான கங்காராமின் மனைவி பதினைந்து வருடங்களுக்கு முன் காலமானார். அதே போல் கங்காராமின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பூலான்தேவியும் கணவனை இழந்தவராவார். பல பேரன், பேத்திகளுக்கு பாட்டி, தாத்தவான இருவரும் தனியே இருந்த நிலையில், கங்காராமை பூலான்தேவி அக்கறையுடன் கவனித்துக்கொண்டார். ஒருவருக்கொருவர் ஒத்தாசையோடு வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தான் இருவரின் காதல் கங்காராமின் மகனுக்கு தெரிந்தது.

அதன் பின், வயதான இருவரையும் சேர்த்து வைக்க கங்காராமின் இளைய மகனான லவ்குஷ் முடிவெடுத்தார். இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்தாரிடம் தனது தந்தைக்கும், பூலான்தேவிக்கும் மணம் செய்து வைக்க சம்மதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் பெருந்தன்மையோடு ஒப்புக்கொள்ள கடந்த வியாழனன்று ஒட்டுமொத்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.

ஆம். அன்று தான் இந்த காதலர்களின் திருமண வைபவம் நடைபெற்றது. ஏறத்தாழ 500 பேர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ!!
Next post தனது செல்லப் பிராணிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)!!